அமர் சோனர் பங்களா (வங்காள மொழி: আমার সোনার বাংলা, ஒலி. ஆமார் ஸோனார் பா₃ங்லா, மொ.'என் பொன்னான வங்காளமே') என்பது வங்காளதேசத்தின் நாட்டுப்பண் ஆகும். அமர் சோனர் பங்களா எனத் தொடங்கும் இப்பாடலை 1906 ஆம் ஆண்டு இரவீந்திரநாத் தாகூர் எழுதியது. 1905 ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்காளதேசம் பாக்கித்தானிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. சன கண மன எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.
நினது வானமும் நினது காற்றும், (கலந்து)
எமது இதயத்தில் இசைத்த வண்ணம் உள்ளது,
இனிய குழலோசையாய்.
ஓ வசந்தத்தின் தாயே
மாமரங்களின் வாசம்
ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.
ஆகா! என்ன ஒரு பேரானந்தம்!
ஓ வசந்தத்தின் தாயே
முற்றிய நெல் வயல்களின் வாசம்
முற்றுமாய் எங்கும் பரவிக் கிடக்கிறது.
என்ன அழகு, என்ன குளுமை,
என்ன அன்பு, என்ன கனிவு!
என்ன ஒரு அமைதியை நீ பரவ விட்டுள்ளாய்!
ஆலமரங்களின் காலடிகளில்
ஒவ்வொரு ஆற்றின் கரைகளிலும்
ஓ என் தாயே, நின் திருவாய்ச் சொற்கள்
என் செவிகளுக்கு அமுதம் போன்றது.
ஆகா என்ன ஒரு பேரானந்தம்!
ஓ தாயே, வருத்தம்
உன் முகத்தில் பரவுமாயின்
என் விழிகள் கண்ணீரால் நிரம்பி விடும்!
என் பொன்னான வங்காளமே,
உன்னை நான் நேசிக்கிறேன்.