ஜாக்கின் அற்புதம்

ஜாக்கின் அற்புதம் (Jockin Arputham, 15 ஆகத்து 1947 – அக்டோபர் 13, 2018)[1] மக்களின் வாழ்வை மேம்படுத்த குப்பத்துப் பகுதிகளில் கட்டடங்கள் கட்ட உதவிய சமூகநலச் செயற்பாட்டாளர் ஆவார்.[2]. மும்பையின் தாராவி பகுதியில் வசித்த இவர், ரமன் மகசேசே விருதையும், இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதையும் பெற்றவர்.


இவர் கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். கட்டுமானத் துறையில் பணிபுரிந்த இவர் மும்பைக்குக் குடிபெயர்ந்தார்.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்