ரஞ்சனி
ரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 59வது மேளகர்த்தா இராகமும், "திசி" என்று அழைக்கப்படும் 10வது சக்கரத்தின் 5வது இராகமுமாகிய தர்மவதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.svg/250px-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.svg.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c2/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.svg/250px-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.svg.png)
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரன காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம2 த2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ம2 க2 ஸ |
- இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது ஔடவ-ஔடவ இராகம் எனப்படுகின்றது.
உருப்படிகள்
- கிருதி - துர்மார்கசராதமுலனு - ரூபகம் - தியாகராஜர்
- கிருதி - ரஞ்சனி நிரஞ்சனி - ஆதி - ஜி. என். பாலசுப்பிரமனியம்
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைகள்
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
- டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
வெளியிணைப்புகள்
- Endaro Mahanubhavulu - Raga Ranjini - டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி