இந்தியாவிலும், தமிழகத்திலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு பலமான எதிர்ப்புகள் இருந்துவந்ததையடுத்து,
தமிழ்நாட்டில் அப்போது ஆளும் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் திமுக கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் மைனாரிட்டியில் வெற்றி பெற்று இருந்ததாலும். அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த சிறிய கட்சிகள் காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர் இன அழிப்பு சம்பவத்தை காரணம் காட்டி எதிர்கட்சியான அதிமுக அணியில் சேர்ந்து விட்டதால்.
திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்கள் ஈழப்போரில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை மறைமுகமாக நடத்தும் காங்கிரஸ் கட்சியின் செயலை கண்டிக்காமல் கூட்டணியில் இருந்து விலகததற்க்கு காரணம் காங்கிரஸ் பெரும்பான்மையின் உதவியுடன் திமுக ஆட்சி செய்து வந்ததாலும் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து விட்டால் பெரும்பான்மை இல்லாமல் தமிழ்நாட்டிலும் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தால் திமுக-காங்கிரஸ் உடனான கூட்டணியை தொடர்ந்தது.
இதையடுத்து எதிர்க்கட்சி அதிமுகவில்ஜெயலலிதாவுடன் பலமான சிறிய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்த போதிலும் 12 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இத்தேர்தல் பிரச்சாரமாக மத்திய காங்கிரஸ் கட்சியின் இன அழிப்பு செயலை கண்டித்து வீர பூமியா ஈழ பூமியா என்று இலங்கை வாழ் ஈழதமிழற்களுக்கு ஆதரவாக பேசினார்.
ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியே 28 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடித்தது இந்திய மக்களிடையேவும், தமிழக மக்களிடையேவும் பெரும் சர்ச்சைக்குரிய வெற்றியாக இன்று வரை இருந்துவருகிறது.