தருமசேது

தருமசேது
Dharmasetu
Sri Maharaja Dharmasetu
சிறீவிஜயம்மாதரம் அரசர்
ஆட்சிக்காலம்728 - 746
முன்னையவர்ராக்காய் பனங்கரன்
பின்னையவர்தரணிந்திரன்
(Dharanindra)
பெயர்கள்
மகாராஜா தருமசேது
Sri Maharaja Sri Dharmasetu
சிறீவிஜய அரசர்கள்
தொடக்கம்
பலெம்பாங்
ஜெயநேசன் 671–702
இந்திரவருமன் 702–728
உருத்திர விக்கிரமன் 728–742
(தகவல் இல்லை) 742–775
பிற்காலம்
சைலேந்திர மரபு
(மாதரம் இராச்சியம்)
பனங்கரன் 746–784
பனராபன் 784–803
ஜாவா
பானு 752–775
தருமசேது (விஷ்ணு) 775–?
தரணிந்திரன் 775–782
சமரகரவீரன் 800–819
ராக்காய் வாராக் 803–827
தயா குலா 827–829
ராக்காய் காருங் 829–847
பிரமோதவர்தனி 847–856
ராக்காய் பிக்கத்தான் 838–850
லோகபாலா 855–885
தகவாசன் 885–885
பனுவங்க தேவேந்திரன் 885–887
தயா பத்திரன் 887–887
உதயாத்தியன் 960–980
இசியா சி 980–988
சூடாமணி வருமதேவன் 988–1008
விஜயோத்துங்கவருமன் 1008–1017
கடாரம்
சங்கராமன் 1017–1030
செரி தேவன் 1028–(?)
சோழர் ஆட்சி
இராசேந்திர சோழன் 1025–1044
குலோத்துங்கன் 1070–1120
மௌலி மரபு
திரிலோகிய ராஜா 1183–(?)

தருமசேது அல்லது மகாராஜா தருமசேது (ஆங்கிலம்: Dharmasetu அல்லது Sri Dharmasetu; இந்தோனேசியம்: Sri Maharaja Sri Dharmasetu) என்பவர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் அரசர் ஆவார்.

அவரின் ஆட்சியின் கீழ், கி.பி 775-இல், மலாய் தீபகற்பத்தின் வடக்கே இருந்த பான் பான் இராச்சியத்தை, சிறீ விஜயப் பேரரசின் மண்டலத்திற்குள் வெற்றிகரமாக இணைத்தார்.

வரலாறு

தாய்லாந்தில் இருந்த நக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) மாநிலத்தில் ஒரு பழைய மடாலயத்தில், அவலோகிதர், வச்ரபானி, கௌதம புத்தர் ஆகிய மூவருக்கும் மூன்று சரணாலயங்களைக் கட்ட தர்மசேது உத்தரவிட்டதைக் குறிக்கும் லீகோர் கல்வெட்டு (Ligor inscription) கிடைத்து உள்ளது.[1]:130–131

மேலும், ஜாவாவை ஆட்சி செய்த சைலேந்திர வம்சத்தின் தலைவராக தர்மசேது இருந்ததாக லீகோர் கல்வெட்டு கூறுகிறது. சிறீ விஜயப் பேரரசிற்கும் சைலேந்திரர்களுக்கும் இடையே உறவுகள் இருந்ததாக அறியப்படும் முதல் நிகழ்வு இதுவே ஆகும்.[1]:221–223

தர்மசேதுவின் மகள் தேவி தாரா

தர்மசேதுவின் மகள் தேவி தாரா (Dewi Tara), பின்னர் சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த சமரதுங்கா (Samaratungga) என்பவரை மணந்தார். பின்னர் 792-ஆம் ஆண்டு வாக்கில் சமரதுங்கா, சிறீ விஜயத்தின் அரியணையை ஏற்றுக்கொண்டார்.[1]:175, 143–145

சிறீ விஜயத்திற்கும் சைலேந்திரர்களுக்கும் இடையிலான உறவு அதன் பின்னர் மிகவும் நெருக்கமாகியது. தர்மசேதுவிற்குப் பிறகு, அவரின் மருமகன் சமரகரவீரன் 782-ஆம் ஆண்டு சிறீ விஜயத்தின் அரசராக அரியணை ஏறினார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4155-67-5.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்