பனிரெண்டாம் தாலமி

பனிரெண்டாம் தாலமி
பனிரெண்டாம் தாலமியின் சிற்பம்
பண்டைய எகிப்தின் தாலமி வம்ச பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 80–58
முடிசூட்டுதல்கிமு 76, மெம்பிஸ்
முன்னையவர்பதினொன்றாம் தாலமி
பின்னையவர்ஐந்தாம் கிளியோபாட்ரா மற்றும் பெரனீஸ் IV
இணை ஆட்சியாளர்ஐந்தாம் கிளியோபாட்ரா
(கிமு79–69)
ஆட்சிக்காலம்கிமு 55–51
முன்னையவர்பெரனீஸ் IV
பின்னையவர்ஏழாம் கிளியோபாற்றா மற்றும் பதிமூன்றாம் தாலமி
பிறப்புகிமு 117
சைப்பிரஸ்
இறப்புகிமு 51
அலெக்சாந்திரியா
துணைவர்ஐந்தாம் கிளியோபாட்ரா
குழந்தைகளின்
பெயர்கள்
பெரனீஸ் IV, ஏழாம் கிளியோபாற்றா, அர்சினோ IV, பதிமூன்றாம் தாலமி, பதிநான்காம் தாலமி
அரசமரபுதாலமி
தந்தைஒன்பதாம் தாலமி
எகிப்தின் ஃபாயூமில் நகரத்தின் உள்ள முதலை கோவிலில் பனிரெண்டாம் தாலமியின் சிற்பம்
கோம் ஓம்போவில் உள்ள இரட்டை கோயிலிலில் பனிரெண்டாம் தாலமியின் சிற்பம்
எட்ஃபூ கோயிலில் பனிரெண்டாம் தாலமி, எதிரிகளைத் தாக்கும் சிற்பம்

பனிரெண்டாம் தாலமி (Ptolemy XII Neos Dionysos Philopator Philadelphos) {கிமு 117} – கிமு 51) எலனியக் காலத்தில் பண்டைய எகிப்தின் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் 12ஆம் பேரரசர் மற்றும் பார்வோன் ஆவார். இவர் எகிப்தை கிமு 80 முதல் 58 முடிய 38 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது பட்டத்தரசி ஐந்தாம் கிளியோபாட்ரா ஆவார். இவரது குழந்தைகள் பெரனீஸ் IV, ஏழாம் கிளியோபாற்றா[1], அர்சினோ IV, பதிமூன்றாம் தாலமி மற்றும் பதிநான்காம் தாலமி ஆவார்.

வரலாறு

பனிரெண்டாம் தாலமி நியோஸ் டியோனிசோஸ் பிலோபேட்டர் பிலடெல்போஸ் பண்டைய எகிப்தின் கிரேக்க தாலமி வம்சத்தின் பார்வோன் ஆவார். டியோனீசியன் பண்டிகைகளில் புல்லாங்குழல் வாசிப்பதில் சிறப்பானவர் என்பதை குறிப்பிட ஆலெட்டீஸ் என்று அழைக்கப்பட்டார்.

பனிரெண்டாம் தாலமி நிச்சயமற்ற தாய் வயிற்றில் பிறந்தவர். கிமு 116 இல் பதினொன்றாம் தாலமியின் தந்தை எட்டாம் தாலமி இறந்தார். பின்னர் பனிரெண்டாம் தாலமி சிறுவயதில், தனது தாய் மூன்றாம் கிளியோபாட்ரா உடன் இணை ஆட்சியாளரானார். இருப்பினும், அவர் தனது தாயார் மற்றும் சகோதரர் தாலமி எக்ஸ் ஆகியோருக்கு எதிராக உள்நாட்டுப் போருக்குத் தள்ளப்பட்டார். இதனால் 12-ஆம் தாலமி கிமு 107 இல் நாடுகடத்தப்பட்டார். மூன்றாம் கிளியோபாட்ரா தனது பேரன்களை கிமு 103 இல் கோஸுக்கு அனுப்பினார். 9-ஆம் தாலமி எகிப்திய சிம்மாசனத்திற்கு திரும்பிய நேரத்தில், கிமு 88 இல் பொன்டஸின் ஆறாம் மித்ரிடேட்ஸால் அவர்கள் கைப்பற்றப்பட்டனர். கிமு 81 இல் அவர்களின் தந்தை இறந்த பிறகு, 12-ஆம் தாலமியின் உடன்பிறவாச் சகோதரி பெரனிஸ் III அரியணையை கைப்பற்றினார். அவர் விரைவில் அவரது உறவினரும், இணை ஆட்சியாளருமான பதினொன்றாம் தாலமியால் கொலை செய்யப்பட்டார். பின்னர் பதினொன்றாம் தாலமியும் கொல்லப்பட்டார். பனிரெண்டாம் தாலமி பொன்டஸிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டு எகிப்தின் பார்வோனாக பதவியேற்றார். அதே நேரத்தில் அவரது சகோதரர் சைப்ரசின் அரசரானார்.

மேற்கோள்கள்

  1. "பேரழகி கிளியோபாட்ரா". https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2021/08/12005600/2910327/Tamil-News-kala-suvadugal-cleopatra-dead.vpf. 

முதன்மை ஆதாரங்கள்

இரண்டாம் நிலை ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்